பட உதவி : இராசகுமார்
தனித்து இயங்கக்கூடியதும், காலத்தில் பழமையானதுமான மொழிகள் உலகிலே இலத்தீன், ஹீப்ரு,தமிழ்,சமஸ்கிருதம்,சீனம்,அரபி போன்றவைதான்! அதனால்தான் அவை ஆறு மொழிகளும் செம்மொழி என சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மொழித்துறை அறிஞர்கள் வகைப்படுத்தி வைத்திருந்தனர்; ஆனால் இன்று அப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு சிறப்பு வசதிகள் பெற்றுத்தர முயன்ற சில அறிஞர்களைக் கைகூலியாக்கிவிட்டு, தமிழை தாங்களே கண்டுபிடித்தது போலவும் அதை மத்திய அரசில் பதிவு செய்து செம்மொழியென ஆக்கியதாகவும் பலநூறு கோடிகளைச் சுருட்டி அதற்கொரு மாநாடு நடத்தினார்கள்; அப்போது ஏற்கனவே செம்மொழியான தமிழை, அறிஞர்கள் செம்மொழியென அழைத்தத் தமிழை "நீ யாரடா புதியதாக செம்மொழி என அறிவிக்க" என்று எவனும் கேட்கவில்லை! கூடித் தாளமிட்ட கும்பல்தான் அதிகம். இன்று தமிழிலிருந்து பிறந்த மொழிகளெல்லாம் நாங்களும் எமது மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து கொடு ; எமது மொழியும் செம்மொழி தான் என கேட்கின்றன. இனி மத்திய அரசில் ஒரு மொழியின் உறுப்பினர்கள் அதிகமாக தாக்கத்தை உண்டாக்குவார்கள் எனில் அந்த மொழி தகுதியில்லாவிட்டாலும் செம்மொழி என அறிவிக்கப்படும்.அதனால்தான் இன்று அரைவேக்காடுகளெல்லாம் தனக்கும் தமிழைப் பற்றி அதிகம் தெரியும் என மார்தட்டி பேட்டி கொடுக்கிறார்கள். இது விவேக்கின் அறியாமை அல்ல; சுரணையற்றத் தமிழ்க் கூட்டம் என்ன புளுகினாலும் ஏற்றுக் கொள்ளும் என்கிற இறுமாப்பு!
-தங்க.இராசேந்திரன்.