ஞாயிறு, 24 ஜனவரி, 2021

 


அவளும் நானும் அலையும் கடலும்…
கார்த்திக் புகழேந்தி

சென்ற மாதம் வேளச்சேரியில் யாவரும் பதிப்பகத்தின் (ஜீவ கரிகாலன்) பி4புக்ஸ் புத்தகக் கடையின் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தேன் ஒரு வாசகனாக. தாமதமாக நான் சென்றதால், திறப்பு விழா முடிந்துவிட, தலைமை விருந்தினர் தமிழச்சி தங்க பாண்டியன் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மூத்த மற்றும் இளைய (வயதில்) எழுத்தாளர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எனக்கு சில எழுத்தாளர்களை மட்டுமே தெரியும்; ‘நட்சத்திர வாசிகள்’ கார்த்திக் பாலசுப்ரமணியன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது நண்பர் கார்த்திக் புகழேந்தி மூலம். எப்போதுமே எனது பணிநிமித்தம் இல்லாமல் ஒரு வாசகனாக எந்த புத்தகக் கடையில் நுழைந்தாலும் நான் ஒரு புத்தகத்தை வாங்கிவிடுவேன். நான் ஒரு நாவல் விரும்பி.
அப்படித்தான் அன்று பி4புக்ஸ்-ன் உள்ளே நுழைந்ததும் நட்புடன் ஜீவா அவர்கள் வரவேற்றார். நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த – காட்சிப் படுத்தப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு, செல்வதற்கு மனமில்லாமல், இருக்கும் காசுக்குத் தகுந்தபடி ஏதேனும் ஒரு சிறு புத்தகம் வாங்க நினைத்தேன். அதே சமயம் அறிமுகமாகியும் நாம் வாசிக்காத எழுத்தாளரின் புத்தகத்தை வாங்குவது என்று முடிவு செய்தேன். சிறிது நேரம் ஜீவா பதிப்பகத்தின் கார்த்திக் புகழேந்தியுடன் உரையாடிவிட்டு, அவரது புத்தகத்தையே தேர்ந்தெடுத்து, அவரது கையெழுத்தினையும் பெற்று மகிழ்ந்தேன். அந்தச் சிறுகதைப் புத்தகம்தான் அவளும் நானும் அலையும் கடலும்… யாவரும் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுப்பு. விலை – 130/- இது மூன்றாம் பதிப்பு. விரைவில் நான்காம் பதிப்பு வெளியிடுவார்கள் என்பது உண்மை.
நண்பர் கார்த்திக் புகழேந்தியின் இந்த ‘அவளும் நானும் அலையும் கடலும்…’ பாசாங்குகள் அற்ற சிறுகதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையானது துவங்கும்போதும், கடிவாளத்தில் பூட்டப்பட்ட குதிரை எப்படித் தன் வண்டியை மெதுவாக இழுத்துப் புறப்படுவது போல புறப்பட்டு, பின்பு சீரான வேகத்தில், ஆரவாரங்களற்றுச் சென்று சேரவேண்டிய இடத்திற்கு செல்கிறதோ, அப்படித்தான் முடியும்போதும்.
வட்டார வழக்கு எழுத்து என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இவைகள் நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைகள் என்பது கூடுதல் சிறப்பு. இத்தொகுப்பில் பல இடங்களில் வரும் வட்டாரப் பழமொழிகள் மிகுந்த ரசிப்பைத் தருகின்றன. மரியாதைக்குரிய ஜோ டி குரூஸ் அவர்கள் சொன்னதுபோல, நிறைய – புழக்கத்தில் விடுபட்டுப்போன தமிழ் வார்த்தைகளை அனாயசமாகக் கையாண்டு, ஆச்சரியப்படுத்துகிறார். நெய்தல் நில வாழ்வை தன்னாலும் சிறப்பாக விவரிக்க இயலும் என்பதைக் காட்டும் சிறுகதை ‘வள்ளம்’. பரஸ்பர நம்பிக்கைகளே அன்றைய வாழ்வை வழி நடத்தின என்பதை விவரிக்கும் களம் ‘வள்ளம்’.
‘அவளும் நானும் அலையும் கடலும்…’
“ஒரு விருப்பம் அதைச் சொல்லியாகிவிட்டது. அது நிராகரிக்கப் படலாம் அல்லது எந்த மூணுசாமி புண்ணியத்திலாவது ஏற்றுக் கொள்ளவும் படலாம். இரண்டில் ஏதாவது ஒன்றுதானே வழி! எனக்கு முதலாவது நேர்ந்திருக்கிறது. அதற்காகக் கலங்கிப்போய் அந்த இடத்திலே சரிந்து விழுந்துவிடவா வாழ்க்கையில் இவ்வளவு போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறோம்.”
‘குதிரைக் குட்டி’ இளவயதுக் காதலின் அருகே நம்மை அழைத்துச் செல்லும்.
எப்பேர்ப்பட்ட இளைஞனையும் வளைத்துப்போடும் தன்மை சாதீயத்திற்கு உண்டு; அதனால்தான் இளைஞர்களைக் கொண்டே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் சாதீயத் தலைவர்கள்; அற்புதமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கதை ‘கொலைச்சொல்’.
‘காதலின் தீபமொன்று’ இதில் வரும் மூத்த கிரிக்கெட் அண்ணாச்சி முருகன்கள் நிறையப் பேர்கள் உண்டு; உள்ளூர் கிரிக்கெட்டை ஆதரித்த அண்ணாச்சிகளில் நானும் ஒருவன்; அவர்கள் இல்லையென்றால், உள்ளூர் அணிகள்(சென்னைக்கு வெளியே இருப்பவை), பந்து வாங்கக்கூடக் காசில்லாமல் திரியும் நிலை. அன்று ரசிகர் மன்றங்களும் இப்படித்தான். அவர்களோடு இணைத்தும் ஒரு காதல் அனுபவத்தைக் காட்டுகிறார் நூலாசிரியர் கார்த்திக் புகழேந்தி. அருமையான யதார்த்தமான இக்கதைகளை வாசகனாகவே ரசித்தேன்; இன்னும் எழுத நிறைய உண்டு; ஆனால், நான் விமர்சகன் இல்லை. அதனால் முரண்கள் ஏதும் இப்புத்தகத்தில் இருப்பதாக நான் அறியவுமில்லை.

 

ஜல்லிக்கட்டு ஜாதிக்கட்டு அதி அசுரன் அவர்கள் காட்டாறு இதழில் எழுதித் தொகுத்த 'ஜல்லிக்கட்டு ஜாதிக்கட்டு' என்ற நூலினை வாசித்தேன். 90 பக்கங்களே கொண்ட இந்நூல் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் எழுப்பும் கேள்விக்கு எவராலும் சரிவர பதில் சொல்ல இயலுமா எனத் தெரியவில்லை!

தமிழனின் பல பண்பாட்டினை எதிர்க்கும் இந்துத்துவவாதிகள் இந்த ஏறுதழுவலை மட்டும் ஆதரிப்பது ஏன்?
தெரிந்தே தமிழ்த் தேசியர்களும் ஆதரிப்பது எப்படி?
தலித்துகள் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள
முடியாமற் போவதற்கான காரணங்கள் என்ன?
சாதிவெறி இல்லை என்பதை மறைக்க முடியுமா?
காளைகளுக்கு எந்தத் தொல்லையும் இல்லை; பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்பவர்கள், காயம் பட்டவருக்கோ, உடல் ஊனமுற்றவருக்கோ அல்லது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கோ என்ன உதவிகள் தரப்படுகிறது?
இதன் பின்னால் உள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எவை? இவற்றின் பங்களிப்புகள் என்ன?
எவ்வளவு காலமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது? எந்தந்த அரசுகள் இதைத் தடுத்தன?
நாட்டு மாடுகள் இதன்மூலம் உண்மையிலேயே காப்பாற்றப்பட்டு, அவ்வினங்கள் விருத்தியாகி வருகின்றதா?
இப்படி எண்ணற்ற நியாயமான கேள்விகளின் தொகுப்புகளாக உள்ள இக்கட்டுரைகள், உண்மையிலேயே பல கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்கப்படுவதாக நான் உணருகிறேன். இதை ஒரு விவாதமாகக்கூட பறிமாறலாம்.
ஒரு வெளிப்படையான உண்மையை உரைப்பதாக நான் எண்ணுவது எனது சொந்தக் கருத்து. ஆதரிப்பதோ எதிர்ப்பதோ தங்களின் விருப்பம். பாரம்பரியம் எனும் பெயரில் எல்லாவற்றையும் ஏற்பது சரியா என்பதே இப்புத்தகத்தின் பலமான கேள்வி. நிச்சயம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

 

 


கறுப்பர் நகரம்

பல புத்தகக் கடைகளிலும் பாரதி புத்தகாலயத்திலும் கறுப்பர் நகரம் புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், எடுத்துப் பார்க்காமலேயே, இது ஒரு தென்னமரிக்க எழுத்தாளரின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல், என்ற அளவில் முன்முடிவு செய்திருந்தேன். அதை எடுத்தும் பார்த்ததில்லை.
சில நாட்களுக்கு முன்பு கொரட்டூர் கிளை நூலகத்திற்குச் சென்றிருந்த போது, நூலகரின் மேசையில் கருப்பர் நகரம் எனும் இந்நூல் இருந்தது. அவரின் சிபாரிசின் பேரில் அதைப் படிக்கத் துவங்கினேன். இதுவரை கரன் கார்க்கி அவர்களின் ஒரு நூலையும் நான் வாசித்ததில்லை.
ஒரு சென்னை மத்திய சிறைக்கைதி தண்டனைக் காலம் முடிந்து (ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கும் மேல்) வெளிவந்தபோது, அவனுக்கு சென்னை புதுவிதமாகக் காட்சியளிக்கிறது. அவன் பார்த்த பல கட்டிடங்கள், பூங்காக்கள் காணாமல் போய்விட்டன. சொந்த பந்தங்கள் ஏதுமின்றி, தங்குவதற்குக்கூட ஒரு இடமின்றித் தவிக்கும் நிலையில் அவனது கடந்தகாலச் சிந்தனைகளே இந்நாவலாக வந்துள்ளது.
சென்னையின் அன்றைய சேரி வாழ்க்கையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டும் இந்நாவலை – ஒரு காலத்தில், நானும் எனது தாய் தந்தையருடன் அந்த அனுபவத்தை பெற்று வளர்ந்தவன் – நான் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்தச் சூழ்நிலை மற்றும் வாழ்வியலை நமது சந்ததிகள் பெறக்கூடாது எனும் எண்ணத்தில் பின்னர் எங்கள் வீடு வளர்ந்துவரும் புறநகர்ப் பகுதிக்கு மாற்றப்பட்டது. வடசென்னைப் பகுதி இன்றைக்கும்கூட 40% கூட மாற்றம் பெறவில்லை.
எஸ்.என்.செட்டித் தெரு, தேவராஜ் கிராமணி தோட்டம், காலரா மருத்துவமனை, காசிமேடு மீனவர் குடியிருப்பு, புதுப்பேட்டை, சித்ரா தியேட்டரிலிருந்து பாந்தியன் சாலை துவக்கம் போன்ற பகுதிகள் இன்றும் என் கண்முன்னால் மிகச்சிறு வளர்ச்சி மட்டுமே அடைந்த மாறுதலாகக் காண்கிறேன். இந்த மக்களின் திறந்தவெளி மற்றும் மாநகராட்சிக் கழிவறைகளின் வரலாறு சிறைத் தண்டனைகளை விடக் கொடுமையானது
செங்கேணி எனும் அந்த சிறைவாசியின் நினைவுக் காட்சிகளே இக்கதை. தந்தை பின்பு தாய் என இருவரையும் இழந்த நிலையில், உறவுகளைத் தேடி சென்னைக்கு வரும் அவனை, உறவுகளும் புறந்தள்ள, வடசென்னை சேரிப் பகுதிக்கு வந்து ஐக்கியமாகிறான் செங்கேணி. உழைப்பால் ஒரு கைவண்டி சம்பாதித்து, அதில் வந்த வருமானத்தில் குடிப்பது, சாப்பிடுவது என தனது காலத்தைத் தள்ளி வரும் வேளையில், ஆராயி எனும் பெண்ணின் மீது காதலாகி, அவளது மாமனின் எதிர்ப்புக்கிடையே, திருமணம் செய்து, பேசின்பிரிட்ஜ் அருகே சேரியில் குடித்தனம் செய்து வருகிறார்கள்; சாராயம் விற்கும் பகுதியை ஒட்டி. சேரி என்றால் குற்றவாளிகளே அதிகம் இருப்பார்கள் என்ற எண்ணத்தைக் கலைத்து அங்கும் மனிதம் உண்டு என்பதைக் காட்டும் இவர்களின் வாழ்வின் வழியே அன்றைய வடசென்னையை மட்டுமின்றி – சேரிகளை, அது மாறாமல் மையங்கொள்ள வைக்கும் அரசு மற்றும் அரசியல்வாதிகளையும் வெளிக்காட்டுவதோடு, காவல்துறையின் குற்றவாளிகளுடனான இணக்கத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர் கரன் கார்க்கி! முதன்முதலாக திரையில் இயக்குநர் துரை அவர்களின் 'பசி' படத்தில்தான் சேரிப்பகுதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன். அந்த அவலச்சுவை இந்த நாவலிலும் எனக்குக் கிடைத்தது. மூக்கைப் பொத்திக் கொள்ளாமல் வாசிக்க வேண்டிய சேரிப் புத்தகம்.
பாரதி புத்தகாலயம் வெளியீடு.


ஞாயிறு, 23 நவம்பர், 2014

Monday, November 17, 2014

தூய்மை இந்தியாவின் கனவான்களுக்கு..



எங்கள் குடியிருப்புக்கு அரசு சுகாதரப்பணியில் இருக்கும்
பெண்கள் வந்தார்கள். பால்கனியில் இருக்கும் செடிகளில்
தண்ணீர் தேங்க கூடாது, பூந்தொட்டிகளின் கீழ் தண்ணீர்
ஒழுகாமல் இருக்க வைத்திருக்கும் தட்டுகளைக் கூட
அக்ற்றிவிட்டு ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டி
டிப்ஸ் வேறு சொல்லிவிட்டுப் போனார்கள்.

பரவாயில்லையே... தூய்மை இந்தியா ஏதோ ஒரு வ்கையில்
வெற்றிகரமாக செயல்படுகிறது. எதற்கெடுத்தாலும் அரசை,
அதிலும் குறிப்பாக் மோதியை விமர்சனம் செய்வதை
தவிர்க்கலாமோ, இன்றைக்கு யார் யார் கையில் எல்லோமோ
'துடைப்பத்தைக் கொடுத்து"  போஸ் கொடுக்க வைத்துவிட்டாரே
என்று பேசும் கன்வாண்களின் கவனத்துக்கு:

மும்பையின் மக்கள் தொகையில் 54% மக்கள் குடிசைப்பகுதியில்
வாழ்கிறார்கள். 25% முதல் 35% வரை மக்கள் சால் வீடுகளிலும்
சாலையோரங்களிலும் வசிக்கிறார்கள். மீதி 10 % முதல் 15%
மக்கள் தான் அடுக்குமாடி குடியிருப்புகளில் , அப்பார்ட்மெண்ட்
வீடுகளில் வாழ்கிறார்கள். உலக வங்கி 2025ஆம் ஆண்டில்
சற்றொப்ப 22.5 மில்லியன் மக்கள் மும்பையில் குடிசைவாசிகளாக
இருப்பார்கள் என்று அறிவித்திருக்கிறது.
காங்கிரசும் சிவசேனாவும் இக்குடிசை மக்களின் வாழ்க்கையில்
விளக்கேற்றப் போவதாக - குடிசை மாற்று வாரியத்தின்
திட்டங்களை அறிவித்திருந்தார்கள். இதுவரை அத்திட்டங்கள்
முழுமையடையவில்லை. தற்போது ஆளும் கட்சியாக
மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாரதீய ஜனதா கட்சி
"தூய்மை இந்தியா" என்று பேசுகிறது.

இக்குடிசைகளின் வாழ்க்கையை மக்கள் நலன் அரசாக
கவனிக்கத் தவறிவிட்டு இவர்கள் பேசும் தூய்மை இந்தியா
எவ்வளவு போலியானது!  ஒருவேளை இக்குடிசைகளில்
இருக்கும் மனிதர்களை இவர்கள் இந்தியர்களாக, ஏன் மனிதர்களாக
நினைக்கவே இல்லையோ?

"அம்மாக்களின் அவஸ்தை" என்ற தலைப்பில் நான் எழுதிய
கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

இரண்டு நிமிசத்திற்கு ஒரு டிரெயின்.
அறிவித்தார் அமைச்சர்
அச்சப்பட்டார்கள் என் அம்மாக்கள்
அடிக்கடி எழுந்து நிற்கும்
அவஸ்தையை நினைத்து.
..
டிரெயினில் பயணம் செய்யும் எவரும் எல்லா மாநிலங்களிலும்
இக்காட்சியை இந்தியாவில் தான் பார்க்க முடியும்.
இதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தலை குனிய வேண்டும்.
வெட்கமா இல்ல ... தூய்மை இந்தியானு மேனா மினிக்கியாட்டம்
போஸ் கொடுக்கறதுக்கு.. ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்..
உள்ள இருக்காம் ஈறும் பேனும்.. போங்கடா.. நீங்களும்
உங்க நாறுன பொழைப்பும்.!

-புதிய மாதவி சங்கரன் அவர்களது வலைப்பதிவிலிருந்து.
                                                
                                                                                                          நன்றி!

வியாழன், 4 செப்டம்பர், 2014

அண்ணா இறந்தபோது ஜெயகாந்தன்



அண்ணா இறந்தபோது ஜெயகாந்தன் பேசியது
அண்ணாவோ உண்மையில் கட்சியைத் தாண்டி பலருடைய நன்மதிப்பைப் பெற்றவர்.
அந்த சமயத்தில் ஜெயகாந்தன் காங்கிரஸ்காரர். காங்கிரசுக்குக்காக அவர், நா.பார்த்தசாரதி, சிவாஜி கணேசன், சோ ராமசாமி, கண்ணதாசன் மாதிரி கலை இலக்கிய நாடக உலக பிரபலங்கள் எல்லாம் காங்கிரசின் பிரச்சார பீரங்கிகள். பேச்சாற்றல், இல்லாவிட்டால் சினிமாக்கார கரிஸ்மா எதையாவது வைத்து அவர்களுக்கும் கூட்டம் வந்தது.
அண்ணா நோய் தாக்கி இறந்து போனார். நாகரிகம் கருதி அது நாள் வரை எதிர்த்தவர்கள் கூட அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். கண்ணதாசன் மாதிரி அண்ணாவுடன் பழகியவர்கள், அண்ணாவின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் காங்கிரஸ் “சார்பாகவே” அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார்கள். ஜெயகாந்தன் அங்கே சிங்கம் போல போயிருக்கிறார். இறந்துவிட்டார் என்பதற்காக இது நாள் வரை நான் அவரைப் பற்றி சொன்னதெல்லாம் வாபஸ் வாங்க முடியாது, அவருடைய வழிமுறைகளுக்கு நான் எப்போதும் எதிரி, அவர் மீது எனக்கு இருந்த விமர்சனங்கள் எல்லாம் அவர் இறந்துவிட்டதால் மறைந்துவிடாது, நாகரீகம் கருதி அவரது குறைகளை இந்த சமயத்தில் பெரிதாக சொல்லாமல் இருப்பது வேறு, அவரிடம் குறையே இல்லை என்று பேசுவது வேறு என்று முழங்கி இருக்கிறார். இட்லிவடை தளத்தில் அவரது பேச்சை போட்டிருந்தார்கள். அதைப் பற்றி அப்போதே எழுத கை வரவில்லை. அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
"இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப் போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனி மனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.
அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும் மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.
அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.
பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை"…
Like                                                                                                                                                     
                                                                                                                                                           Guru Manutd

புதன், 20 ஆகஸ்ட், 2014

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களின் தேவைதான் என்ன?

2012-ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது, ஹிந்தித் திரையுலகின் முக்கிய நாயகியாகக் கோலோச்சியவரும், தமிழ்த் திரையின் காதல் மன்னனாக கொடிகட்டிப் பறந்த ஜெமினி கணேசன் அவர்களின் புதல்வியுமான நடிகை ரேகா அவர்களுக்கும், கிரிக்கெட்டின் பல உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கருக்கும் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது; அவர் பதவி ஏற்றபோது நடிகை ரேகா, தொழில் அதிபர் அனு ஆகா ஆகியோரும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றனர். இதுபோல வாஜ்பாய் ஆட்சியில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுக்கும், அதற்குப் பல வருடங்களுக்கு முன்பு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் இப்பதவி வழங்கப் பட்டது;

2012ம் ஆண்டு இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அதில் இருந்து அவர்கள் நீண்ட காலமாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.  60 நாட்கள் அவைக்கு வரவில்லை என்றால், அவர்களது பதவியை பறிக்க முடியும். கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் வெறும் மூன்று நாட்களே அவைக்கு வந்துள்ளார். இந்தி நடிகை ரேகா 7 நாட்கள் மட்டுமே வந்துள்ளார். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்’ என்று கேட்டார்.அவரது கேள்விக்கு பதில் அளித்த பேசிய மாநிலங்களவை சபாநாயகர் ஹமீது அன்சாரி, சச்சின் டெண்டுகல் 40 நாட்கள் அவைக்கு வரவில்லை. நடிகை ரேகா அதற்கும் குறைவான நாட்களே அவைக்கு வரவில்லை. எனவே அரசியலமைப்பு மீறல்கள் எதுவும் இதில் இல்லை. 60 நாட்கள் எந்த அனுமதியும் பெறாமல் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இந்த வரிசையில் பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் நடிகை ஹேமா மாலினி மற்றும் சத்ருகன் சின்ஹா உள்ளனர். எல்லோரையும் விட கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வருகை மிகவும் மோசமாக உள்ளது. 3 நாட்கள் மட்டும் அவைக்கு வந்த அவர் இந்த ஆண்டு பாராளுமன்றத் தொடர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் பாராளுமன்றத்தில் நடந்த எந்த ஒரு விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. 41 வயதான சச்சின் தெண்டுல்கர் ஜூன் 2012 ல் ஒரு உறுப்பினராக பதவியேற்ற போது விளையாட்டுக்கு ஒரு குரல் ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்தார்.     இராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் திராப்பட நடிகை - நர்கீஸ் தத். 


     ஹிந்தித் திரைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அவர்களும் சில

தொழிலதிபர்களும்கூட நியமன எம்பிக்களாக உள்ளனர்


வ.எண்.உறுப்பினர் பெயர்அரசியல் கட்சிபதவிக்காலம்
1மணிசங்கர் அய்யர்இந்திய தேசிய காங்கிரஸ்22-03-2010 முதல் 21-03-2016 வரை
2ஜாவீத் அக்தார்நியமனம்22-03-2010 முதல் 21-03-2016 வரை
3சியாம் பெனகல்நியமனம்16-06-2006 முதல் 15-06-2012 வரை
4சோபனா பார்த்தியாநியமனம்16-06-2006 முதல் 15-06-2012 வரை
5ஹெச்.கே.துவா ஸ்ரீநியமனம்18-11-2009 முதல் 17-11-2015 வரை
6டாக்டர் அசோக் எஸ்.கங்குலிநியமனம்18-11-2009 முதல் 17-11-2015 வரை
7பி.ஜெயஸ்ரீநியமனம்22-03-2010 முதல் 21-03-2016 வரை
8டாக்டர். ராம் தயாள் முண்டாஇந்திய தேசிய காங்கிரஸ்22-03-2010 முதல் 21-03-2016 வரை
9டாக்டர் பால்சந்திரா மங்கேகர்நியமனம்22-03-2010 முதல் 21-03-2016 வரை
10பேராசிரியர். எம்.எஸ்.சுவாமிநாதன்நியமனம்10-04-2007 முதல் 09-04-2013 வரை
11டாக்டர். கபிலா வாத்சாயன்நியமனம்10-04-2007 முதல் 15-02-2012 வரை
12காலியாக உள்ளது

ராஜ்ய சபா நியமன உறுப்பினர்கள்

மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியேறும் ஆளுநர் பிமல் ஜலான், ஹிந்தி சினிமாவின் முன்னாள் நடிகை ஹேம மாலினி (கும்பகோணம் பெண் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்), இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் கஸ்தூரி ரங்கன், மல்யுத்த வீரர் தாரா சிங், தில்லியிலிருந்து வெளியாகும் 'தி பயனீர்' ஆங்கில செய்தித்தாள் ஆசிரியர் சந்தன் மித்ரா, சமூக சேவகர் நாராயண் சிங் (என்ன சேவை புரிந்தவர் என்று தெரியவில்லை) மற்றும் ஹிந்தி அறிஞர் வித்யா நிவாஸ் மிர்தா ஆகிய ஏழு பேர்களும் பாராளுமன்றத்தின் மேலவைக்கு நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வைஜெயந்தி மாலா பாலி மற்றும் லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட திரைத்துறையினரும் நியமன எம்பிக்களாக இருந்துள்ளனர்.
Records from the Rajya Sabha show that except film actress Shabana Azami who has highest attendance among celebrities, none of them could make the Rajya Sabha a platform to raise issues of public interest. Singer Lata Mangeshkar and painter M F Husain, on the other hand, had the worst record of not only attending the House but also in participating in a debate or raising any issue.
Fifteen out of 118 members 'nominated' to the Rajya Sabha since 1952 were from different 'arts' fields. It included Prithvi Raj Kapoor, Vajayantimala Bali, Nargis Dutt, Mrinal Sen, Shyam Benegal, Pandit Ravi Shankar and Hema Malini.
Analysis of the attendance records of these members during six consecutive Sessions of their tenure shows Lata Mangeskar who was the Rajya Sabha MP from November 22, 1999 to November 21, 2005 had attended only six out of over 170 sittings 2000-01.
Filmmaker Mrinal Sen had more or less similar records when he had attended 30 out of 170 sittings of Upper House during the same period as compared to 113 by Shabana Azami. SimilarlyHema Malini and wrestler DarA Singh who also acted in film and tele-serials too had poor records of attending House proceedings.
Hema Malini who was nominated to the House as MP in August, 2003 had attended only 50 out of 127 sittings during 2004-05 as against Dara Singh who attended 76 sittings during the same period. Though their numbers were higher than Lata, Husain or Mrinal Sen, their record was still quite poor as compared to active politicians, academicians, writers or retired civil servants who joined the Upper House.
The reason for their absence may vary from person to person, but it has put the debate back on the table after the government on Thursday nominated film actress Rekha and cricket iconSachin Tendulkar for the Rajya Sabha. Since Sachin is still an active cricketer, it is to be seen whether he would be absent from the Rajya Sabha like most of celebrities or he would rather mark for himself in Parliament, like he has on the cricketing field.





புதன், 18 ஜூன், 2014

விவேகமற்ற விவேக்!


புகைப்படம்: தவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேகுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் !  

இன்று 13/06/2014 காலை 98.3 பண்பலையில் நடிகர் விவேக் அவரது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறான செய்தி ஒன்றை நேரலையில் பதிவு செய்தார். அவர் கூறியதாவது , சமஸ்க்ரித மொழியில் இருந்து தான் உலக மொழிகள் எல்லாம் பிறந்தன. தமிழும் சமஸ்க்ரித மொழியில் இருந்து தான் பிறந்தது என்று பிழையான செய்தியை வெளியிட்டு தமிழ் மொழியை இழிவு செய்துள்ளார். 

இந்தத் தாய் அவளுடைய பிள்ளைக்கு பிறந்தவள் என்று சொல்வது போல் உள்ளது நடிகர் விவேக்கின் கூற்று . விவேக் அவர்களுக்கு மொழி குறித்த அறிவோ, தமிழ் மொழி வரலாறோ தெரியவில்லை எனில் அதை பற்றி பேசக் கூடாது. 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதியை பெற்றது. செம்மொழி ஆகுவதற்கு பல்வேறு தகுதிகள் வேண்டும் . அதில் ஒன்று பிறமொழிகளின் துணையில்லாமல் தானே தனித்து நிற்கும் திறன் இருக்க வேண்டும் என்பது தான். இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே அந்த சிறப்பு உள்ளது . இதை அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் என்பவர் உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் தமிழ் தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குகிறது என்பதை தேவநேய பாவாணர் போன்ற பன்மொழி அறிஞர்கள் நிரூபித்து உள்ளனர். தமிழின் தாக்கம் கண்டம் விட்டு கண்டம் சென்றுள்ளதை உலக மொழிகளில் பார்க்க முடிகிறது . ஜப்பானியர்களும் , கொரியர்களும் அவர்கள் மொழியில் தமிழின் தாக்கம் உள்ளது என்பதை எடுத்துக் கூறுகின்றனர். இந்திய அளவில் அதிக கல்வெட்டுக்களும், வரலாற்றுக்கு முந்தைய எழுத்துருக்களும் காணப்படுவது தமிழ் மொழியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்று தமிழினத் தொன்மையை  தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன . 

அப்படி ஒரு தற்சார்புள்ள, தனித்துவமான தமிழ் மொழியை சமஸ்க்ரித  மொழிக்கு பிறந்த மொழி என்று தமிழரான விவேக் கூறியுள்ளது வேதனையானது , கண்டனத்திற்கு உரியது . இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக் தனது தவறை திருத்திக் கொண்டு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கேட்டுக் கொள்கிறது. இனி வரும் காலங்களில் விவேக் தனது படங்களிலோ , பொது ஊடகங்களிலோ இது போன்ற பிழையான தமிழ் விரோத செய்தியை வெளியிட்டு தமிழ் மக்களை புண்படுத்த  வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம். 

தமிழர் பண்பாட்டு நடுவம்



பட  உதவி :  இராசகுமார் 

தனித்து இயங்கக்கூடியதும், காலத்தில் பழமையானதுமான மொழிகள்  உலகிலே இலத்தீன், ஹீப்ரு,தமிழ்,சமஸ்கிருதம்,சீனம்,அரபி போன்றவைதான்! அதனால்தான் அவை ஆறு மொழிகளும் செம்மொழி என சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மொழித்துறை அறிஞர்கள் வகைப்படுத்தி வைத்திருந்தனர்; ஆனால் இன
்று அப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு சிறப்பு வசதிகள் பெற்றுத்தர முயன்ற சில அறிஞர்களைக் கைகூலியாக்கிவிட்டு, தமிழை தாங்களே கண்டுபிடித்தது போலவும் அதை மத்திய அரசில் பதிவு செய்து செம்மொழியென ஆக்கியதாகவும் பலநூறு கோடிகளைச் சுருட்டி அதற்கொரு மாநாடு நடத்தினார்கள்; அப்போது ஏற்கனவே செம்மொழியான தமிழை, அறிஞர்கள் செம்மொழியென அழைத்தத் தமிழை "நீ யாரடா புதியதாக செம்மொழி என அறிவிக்க" என்று எவனும் கேட்கவில்லை! கூடித் தாளமிட்ட கும்பல்தான் அதிகம். இன்று தமிழிலிருந்து பிறந்த மொழிகளெல்லாம் நாங்களும் எமது மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து கொடு ; எமது மொழியும் செம்மொழி தான் என கேட்கின்றன. இனி மத்திய அரசில் ஒரு மொழியின் உறுப்பினர்கள் அதிகமாக தாக்கத்தை உண்டாக்குவார்கள் எனில் அந்த மொழி தகுதியில்லாவிட்டாலும் செம்மொழி என அறிவிக்கப்படும்.அதனால்தான் இன்று அரைவேக்காடுகளெல்லாம் தனக்கும் தமிழைப் பற்றி அதிகம் தெரியும் என மார்தட்டி பேட்டி கொடுக்கிறார்கள். இது விவேக்கின் அறியாமை அல்ல; சுரணையற்றத் தமிழ்க் கூட்டம் என்ன புளுகினாலும் ஏற்றுக் கொள்ளும் என்கிற இறுமாப்பு!

                                                                                                                   -தங்க.இராசேந்திரன்.