ஞாயிறு, 21 ஜூலை, 2024

 இந்தியாவில் நெருக்கடி நிலை
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூல்களில் ஒன்றுதான்,

இரா.சுப்பிரமணி அவர்கள் எழுதிய
'இந்தியாவில் நெருக்கடி நிலை'
சாளரம் வெளியீடான இந்நூல் இந்திராவின் ஆட்சியின்போது நடைபெற்ற நெருக்கடிநிலை கால அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தச் சமயத்தில் நீமன்றங்களின் சார்பு மற்றும் சார்பற்றநிலை, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படல், பத்திரிகைகளிலும் சார்பு மற்றும் சார்பற்றநிலை, அரசியல் கட்சிகளிலும் ஆதரவு எதிர்ப்புப் பிரிவுகள் என்ற நிலை அரங்கேறியதன் விளக்கம் இதில் இடம் பெற்றுள்ளது.
பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துரிமை எப்படி அடக்கப்பட்டது என்பதோடு, மக்களின் மீதும் தேசத் தலைவர்களின் மீதும் அரங்கேற்றப்பட்டக் கொடுமைகளும், அதே காலகட்டத்தில் தமிழகத்தின் நிலை என்ன? மிக அதிக எதிர்ப்புக் காட்டிய மாநிலம், அதிலும் மத்திய அரசை எதிர்த்து சட்டமன்றத்திலேயே முழக்கம் கொடுத்தது யார் என்ற விவரத்தோடும் அமைந்திருக்கும் இந்நூல் ஒரு அரசியலின் ஒரு காலத்தின் பெட்டகம்; இப்புத்தகத்தை அந்த ஒரு கண்ணோட்டத்தோடு சுருக்கிவிட முடியாது; இன்றைய பாஜக, அன்றைய ஜனசங்கமானது எவ்வளவு தீவிரமாக சக எதிர்க் கட்சிகளோடு இணைந்து போராடியது எனக் காட்டும் வேளையில், அப்படிப்பட்ட ஜனசங்கத்தின் ஆட்சியிலா இப்போது நாம் வாழ்கிறோம் எந்த வகையில் வாழ்கிறோம் என்ற கருத்தையும் முன் வைக்கிறது.
190 பக்கங்கள் கொண்ட இந்நூலை 2019 சென்னை புத்தகக் காட்சியில் கருப்புப் பிரதிகள் அரங்கத்தில் வாங்கியபோதும் இப்போதுதான் வாசித்து முடிக்க இயன்றது. நிச்சயம் இது இளைய சமுதாயத்தின் அரசியல் வளர்ச்சிக்கு கண்ணாடியாக விளங்கும் நூல்.
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Nizamdeen Peer Mohd, Barath Kumaar மற்றும் 15 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக