ஞாயிறு, 24 ஜனவரி, 2021

 

ஜல்லிக்கட்டு ஜாதிக்கட்டு அதி அசுரன் அவர்கள் காட்டாறு இதழில் எழுதித் தொகுத்த 'ஜல்லிக்கட்டு ஜாதிக்கட்டு' என்ற நூலினை வாசித்தேன். 90 பக்கங்களே கொண்ட இந்நூல் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் எழுப்பும் கேள்விக்கு எவராலும் சரிவர பதில் சொல்ல இயலுமா எனத் தெரியவில்லை!

தமிழனின் பல பண்பாட்டினை எதிர்க்கும் இந்துத்துவவாதிகள் இந்த ஏறுதழுவலை மட்டும் ஆதரிப்பது ஏன்?
தெரிந்தே தமிழ்த் தேசியர்களும் ஆதரிப்பது எப்படி?
தலித்துகள் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள
முடியாமற் போவதற்கான காரணங்கள் என்ன?
சாதிவெறி இல்லை என்பதை மறைக்க முடியுமா?
காளைகளுக்கு எந்தத் தொல்லையும் இல்லை; பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்பவர்கள், காயம் பட்டவருக்கோ, உடல் ஊனமுற்றவருக்கோ அல்லது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கோ என்ன உதவிகள் தரப்படுகிறது?
இதன் பின்னால் உள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எவை? இவற்றின் பங்களிப்புகள் என்ன?
எவ்வளவு காலமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது? எந்தந்த அரசுகள் இதைத் தடுத்தன?
நாட்டு மாடுகள் இதன்மூலம் உண்மையிலேயே காப்பாற்றப்பட்டு, அவ்வினங்கள் விருத்தியாகி வருகின்றதா?
இப்படி எண்ணற்ற நியாயமான கேள்விகளின் தொகுப்புகளாக உள்ள இக்கட்டுரைகள், உண்மையிலேயே பல கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்கப்படுவதாக நான் உணருகிறேன். இதை ஒரு விவாதமாகக்கூட பறிமாறலாம்.
ஒரு வெளிப்படையான உண்மையை உரைப்பதாக நான் எண்ணுவது எனது சொந்தக் கருத்து. ஆதரிப்பதோ எதிர்ப்பதோ தங்களின் விருப்பம். பாரம்பரியம் எனும் பெயரில் எல்லாவற்றையும் ஏற்பது சரியா என்பதே இப்புத்தகத்தின் பலமான கேள்வி. நிச்சயம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக